மால்டா: கடந்த வியாழக்கிழமை 80 பேரை ஏற்றிக் கொண்டு மேற்கு வங்கத்தின் ராம்பூர்கட் சந்தையில் இருந்து பீகார் மாநிலம் கதிஹார் நோக்கி பயணித்த படகு மகாநந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி காணாமல் போயினர். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 2 பேர் பீகாரையும் 7 பேர் மேற்கு வங்கத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் உயிருடன் மீட்கப்பட்ட 9 பேர் மால்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.