×

படகு விபத்தில் பலி 9 ஆனது

மால்டா: கடந்த வியாழக்கிழமை 80 பேரை ஏற்றிக் கொண்டு மேற்கு வங்கத்தின்  ராம்பூர்கட் சந்தையில் இருந்து பீகார் மாநிலம் கதிஹார் நோக்கி பயணித்த படகு  மகாநந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 4 பேர்  உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி காணாமல் போயினர்.  இந்நிலையில், நேற்று அதிகாலை 5 சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பலியானவர்களின்  எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 2 பேர் பீகாரையும் 7 பேர் மேற்கு வங்கத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும்  உயிருடன் மீட்கப்பட்ட 9 பேர் மால்டா அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : boat accident , boat, crash,sacrifice became 9
× RELATED குஜராத் படகு விபத்து; 14 பள்ளி...