×

தற்கொலைக்கு முன்றவரை தடுத்த மூவருக்கு கத்திரிக்கோல் குத்து

ஆலந்தூர்: ஆலந்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த கருணாநிதி மகன் கார்த்திக் நிவாஸ் (30). கடந்த 7 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்ட இவர், நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்கொள்வதாக கூறி, வீட்டினுள் கதவை பூட்டிக்கொண்டார். இதை பார்த்து, அருகில் வசிக்கும் மணிவண்ணன் (55), அவரது மனைவி லீலாவதி மற்றும் பள்ளி ஆசிரியை மேரி வளர்மதி (45) ஆகியோர் கதவை தட்டி அவரை தடுக்க முயன்றனர். நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை திறந்த கார்த்திக் தன்னிடம் இருந்த கத்திரிக்கோலால் மூவரின் கழுத்திலும் சரமாரியாக குத்தினார். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார், கார்த்திக் நிவாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Preventing Suicide Pregnant Scissors ,trio , Preventing, Suicide, Pregna, trio
× RELATED கடன் பிரச்னையில் பார் ஊழியர் மனைவி, மகனுடன் தற்கொலை