×

கொள்ளையர் செல்போன் பறித்ததால் ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் பரிதாப பலி

தண்டையார்பேட்டை: ஆந்திர மாநிலம் கூடூரை சேர்ந்த சாந்தினி பாஷா (26) என்பவர், நேற்று முன்தினம் இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். எண்ணூர் அருகே, சிக்னலுக்காக ரயில் மெதுவாக சென்றபோது, 5 பேர் திடீரென சாந்தினி பாஷாவின் செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர்.அவர்களை பிடிக்க முயன்றபோது, ரயிலில் இருந்து கீழே விழுந்த சாந்தினி பாஷா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட எண்ணூரை  சேர்ந்த நாகராஜ் (22), மகேஷ் (19), பிரகாஷ் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : robber , Because ,robber, cellphone, train ,miserable
× RELATED நெற்குன்றம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய ரவுடி கைது