சென்னை: சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பணம், செல்போன், நகைகளை கொள்ளையடித்து வந்த, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 10 பேரை கடந்த 2ம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இந்த கும்பலின் தலைவன் ஆந்திர மாநிலம் விஜயவாடா கனக துர்கா கோயில் தெருவை சேர்ந்த ரவி (28) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
* சென்னை திரு.வி.க நகர் பெரம்பூர் ஜார்ஜ் காலனியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 24 சவரன் நகை மற்றும் 40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
* மணலி புதுநகர் துவாரகா நகரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் அய்யனார் (45), கடந்த 2ம் தேதி இரவு தனது சகோதரருடன் பைக்கில் ஆண்டார்குப்பம் சந்திப்பு அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிய மாடு மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அய்யனார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பைக் மோதியதில் மாடும் இறந்தது.
* புதுவண்ணாரப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த இமானுவேல் (28) என்பவரை, முன்விரோத தகராறில் இரும்பு ராடால் சரமாரி தாக்கிய, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* பெரம்பூரை சேர்ந்த இப்ராகிம் (29) என்பவரை கத்தி முனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆனந்த் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* நெற்குன்றம் அம்பிகா நகரை சேர்ந்த ஷெரிப் இஸ்லாம் (23) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த 3 செல்போன்கள் மற்றும் ₹30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
* மதுரை மாவட்டம் அவினியாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர், கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊர் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தபோது, அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிய, சேலம் மாவட்டத்தை சேர்ந்த காஜா மொய்தீன் (23) மற்றும் பாபு (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* வில்லிவாக்கம் தாந்தோணியம்மன் கோயில் தெருவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அதே பகுதியை சேர்ந்த திருமுருகன் (40) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
* கொடுங்கையூர் 5வது பிளாக் 6வது தெருவை சேர்ந்த ராஜா செல்வம் (17), தனது நண்பருடன் பைக்கில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் சாலையில் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்தார்.
* வியாசர்பாடி எருக்கஞ்சேரியை சேர்ந்த மகேந்திரன் (40) என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சரத் (20), அமர்நாத் (21), ஆகாஷ் (19), விக்னேஷ் (20), சூர்யா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* கொடுங்கையூர் எருக்கஞ்சேரி தனியார் பள்ளியில் மோதலில் ஈடுபட்ட சர்மா நகர் எஸ்.ஏ.காலனியை சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட 6 மாணவர்களை ேபாலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
* தரமணி எம்ஜிஆர் தெருவை சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் மைதீன் (45) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து ₹15 லட்சம் மற்றும் 12 சவரன் நகைகள் கொள்ளை போனது. போலீசார் விசாரணையில், மைதீன் கடையில் வேலை பார்த்த புதுவை மாநிலத்தை சேர்ந்த சையது (24), அவரது தம்பி அப்துல்லா (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.