- தாக்குதலில்
- அதிரடி பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள்
- சென்னை
- கோவில் பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள்
- கோயம்புத்தூர்
- கோவில்பட்டி
- PDO அலுவலகம்
சென்னை: சென்னை, கோவையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் பணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்டிகை நாட்களை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பரிசுப்பொருட்களை இடைத்தரகர்கள் தருவதாக வந்த தகவலை அடுத்து, கடந்த இரண்டு தினங்களாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் 7 லட்சம் கணக்கில் வராத பணம் பிடிபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வட்டார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
அலுவலகத்தில் 40 ஆயிரத்து 710 சிக்கியது. அதைத் தொடர்ந்து, நேற்று வளசரவாக்கம், ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாபிரெட்டிபட்டியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.அதேபோல, கோவை துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ₹2 லட்சம் சிக்கியது. கோவில்பட்டியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில் 3.17 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது. நேற்று முன்தினம் 3 இடங்களில் நடந்த சோதனையில் மொத்தம் 5.58 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது.