×

உடல் நலக் குறைவு, சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: உடல் நலக் குறைவு, சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா  3 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு தலைமைக் காவலர் ரஜினிகாந்த், தஞ்சாவூர் வட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் காசியய்யா, வேலூர் மேல்பட்டி உதவி ஆய்வாளர் சீனிவாசன், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் சந்திரசேகர், பழனி அடிவாரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ், விருதுநகர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திருப்பதி, மல்லி காவல் நிலைய தலைமைக் காவலர் பழனி செல்வ பாரதி, சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி; அரியலூர் மீன்சுருட்டி காவல் நிலைய தலைமைக் காவலர் குமார், மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலர் பிச்சையம்மாள்,நாகை வேளாங்கண்ணி காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுவாமிநாதன், வாய்மேடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் கண்ணையன், தூத்துக்குடி கயத்தார் காவல் நிலைய தலைமைக் காவலர் இராஜமாரி, சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிபு சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், ஓமலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன், சென்னை பெருநகர காவல், கோட்டூர்புரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜானகிராமன், திருச்சி ஆயுதப்படை தலைமைக் காவலர் வந்த அசோக் குமார், கொள்ளிடம் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜா, புதுக்கோட்டை ஆலங்குடி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கோதண்டபாணி, கன்னியாகுமரி ஈத்தாமொழி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் மணிகண்டன் ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலர் கணேசன், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் வேணுகோபால், சென்னை பெருநகரக் காவல், புனித தோமையர் மலை ஆயுதப்படை 2 நிலைக் காவலர் சுபாஷ், தூத்துக்குடி காடல்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜேக்கப், கிருஷ்ணகிரி பாரூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.உடல் நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹ 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Edappadi Palanisamy ,road accidents , health, road accidents, Chief Minister ,Edappadi Palanisamy
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்