×

காவல் நிலையத்தில் வாலிபர் தீக்குளிப்பு: பவானியில் பரபரப்பு

பவானி: பவானி காவல் நிலையத்தில் வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் பவானி பெரியார் நகரைச் சேர்ந்தவர் அல்லிமுத்து மகன் ராஜூ (29), மினி ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நந்தினி (23). இவர்களுக்கு தர்சன் (5) என்ற மகன், ரக்சிதா (2) என்ற மகள் உள்ளனர்.ராஜூவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து, தான் வசித்துவந்த பகுதியில் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் தகராறில் ஈடுபட்டதால், அப்பகுதி மக்கள், பவானி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று குடிபோதையில் ராஜூ உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு பவானி காவல் நிலையத்துக்கு வந்தார். வரவேற்பு பகுதியில் அமர்ந்த போலீசார் முன்னிலையில் திடீரென தீக்குச்சியை உரசி உடலில் தீ வைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றார். அதிர்ச்சியடைந்த போலீசார்,  ராஜூவை கீழே தள்ளி உடல் மீது, துணியை போர்த்தி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.உடல் கருகிய நிலையில், பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சைக்கு பின், ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ராஜூவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போலீஸ் நிலையத்துக்குள் வாலிபர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Bhavani ,police station , Volunteer fire , police station, Situation ,Bhavani
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்