மதுராந்தகம் : காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயுத பூஜை விடுமுறை காரணமாக பொது மக்கள் வாகனங்களில் அதிக அளவில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதால் சுங்கச்சாவடியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களுக்காக கூடுதலாக 3 கவுண்டர்கள் வழியாக வாகனகங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.