×

தஞ்சை பெரிய கோயிலுக்கு சொந்தமான அழகர், திரிபுராந்தகர் ஆகிய சிவன் சிலைகள் மீட்பு

திருச்சி: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்தில் இருந்து 2 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலுக்கு சொந்தமான அழகர், திரிபுராந்தகர் ஆகிய சிவன் சிலை மீட்கப்பட்டுள்ளது. 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் காட்சி பொருளாக இருந்து வந்தது. அரபு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் சிலைகளை மீட்டு திருச்சி எடுத்து சென்றுள்ளனர். விசாரணை நடத்திய பின் சிலைகள் தஞ்சை பெரிய கோயிலில் ஒப்படைக்கப்படும்.


Tags : Shiva ,Tanjay Periya Temple ,Tanjay Periya Temple of Restoration , Tanjore Temple, Statues, Restoration, Beauty, Tripuranthgarh
× RELATED முருகப் பெருமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் தலங்கள்