சென்னை: சென்னை வேளச்சேரியில் பணியில் இருந்த மாநகர பேருந்து ஓட்டுநர் ராஜேஷ் கண்ணா(34) திடீர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். வேளச்சேரி 100 அடி சாலையில் தடம் எண் 570 பேருந்தை இயக்கிய ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். நெஞ்சுவலியால் நிலைகுலைந்த பேருந்து ஓட்டுநர் மோதியதில் சாலையில் சென்றுகொண்டிருந்த 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.