சென்னை: இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட, 49 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.