சென்னை: சென்னை ஆவடி அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018-ல் நவம்பர் மாதம் ஜெகதீசன், அவரது மனைவி கொலை செய்யப்பட்டனர். கொலை சம்பவத்திற்கு பிறகு ஜெனதீசன் வீட்டில் பணியாற்றி வந்த சுரேஷ் மற்றும் லட்சுமி இருவரும் தலைமறைவாகினர். இருவரையும் 11 மாதங்களாக தேடி வந்த காவல்துறை விசாகப்பட்டினத்தில் கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.