×

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் 6 நாள் பிரசாரம்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  6 நாட்கள் பிரசாரம் செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வருகிற 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை 6  நாட்கள் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்வார் என்று அதிமுக தலைமை நேற்று முன்தினம் அறிவித்தது. இதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் 6 நாட்கள் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வருகிற 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, வருகிற 13, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியிலும், 15, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியிலும் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்வார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Vikravandi ,Nankuneri ,O. Pannirselvam , Vikravandi, Nankuneri, O. Pannirselvam, Pres
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி...