×

மாணவர்கள் திடீர் மோதல்

பெரம்பூர் :  கொடுங்கையூரில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் நேற்று பள்ளி முடிந்ததும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 குழுக்களாக பிரிந்து, பயங்கரமாக மோதி கொண்டனர். இதில் 3 மாணவர்களுக்கு தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் போலீசார் பள்ளி நிர்வாகத்திடமும் மாணவர்களிடமும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : clash , Sudden clash , students
× RELATED நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள்...