×

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரின் காவலை நீடித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து படம் எடுத்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), திருநாவுக்கரசு(27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 4 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கில் கைதான மணிவண்ணன் பாலியல் வன்கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் கடந்த மாதம் மேற்கண்ட 5பேரும் கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் கைதான திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேருக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் மீண்டும், நேற்று சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிஜேஎம் கோர்ட்டில் நீதிபதி ரவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை வரும் 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Pollachi ,persons ,Thirunavukkarasu 5 , Pollachi Sexuality, Thirunavukkumar, Police Extension
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!