சென்னை : நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக அக்டோபர் 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் துணையில்லாமல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதி, நீட் ஆள்மாறாட்டத்திற்கு உதவிய அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து பதிலளிக்க சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.