×

திருச்சி நகைக்கடை கொள்ளை : கொள்ளையர்களை பிடிக்க திருவாரூரில் மேலும், 2 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி : திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ள கொள்ளையர்களை பிடிக்க திருவாரூரில் மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன், திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவில் கொள்ளை சம்பவமானது அரங்கேறியது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மடப்புரத்தை சார்ந்த மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : units ,Trichy ,robbers ,Thiruvarur , Trichy, Jewelery, Loot, Lalitha Jewelery, Special Forces
× RELATED தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்நுகர்வு நேற்று பதிவு..!!