×

பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் மதுரை செல்லும் விமானம் திடீர் ரத்து: பயணிகள் தவிப்பு

சென்னை: ஏர் இந்தியா அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்  நேற்று காலை 9.40 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டுச் செல்லவேண்டும். அந்த விமானத்தில் பயணம் செய்வதற்கு 23 பயணிகள்  மட்டுமே இருந்தனர்.
இதையடுத்து போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் மதுரை செல்ல வேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அந்த 23 பயணிகளும் எங்கள் நிலை என்ன என்று ஏர் இந்தியா அதிகாரிகளை கேட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பிறகு நேற்று பகல் 11.30 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் ஏர் இந்தியா  விமானத்தில் அனுப்பி வைப்பதாக கூறினர். இதையடுத்து 23 பயணிகளும் 2 மணி நேரம் காத்திருந்தனர்.பின்னர், மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து மதுரை செல்லும் அந்த விமானத்தில் 23 பயணிகளையும் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைத்தனர். போதிய பயணிகள் இல்லாமல் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் 2 மணி நேரம்  தவித்தனர்.

Tags : flight ,Madurai , Passenger, Madurai, flight canceled
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...