சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் மேற்பார்வையாளர்களாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாசே ஜெ.ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்குழுவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்களில் கூடுதல் மேற்பார்வையாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் நாசே. ஜெ.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.