×

கோவில்பதாகை ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆவடி: ஆவடி அடுத்த கோவில்பதாகை ஏரியை ஆக்கிரமித்து புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக புகார் வந்ததை தொடர்ந்து ஆவடி தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீனத், பிரீத்தி  ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிருந்தாவன் நகர் பகுதியில் தனியார் சிலர், ஏரியை ஆக்கிரமித்து மதில்சுவர் கட்டப்பட்டும், எல்லை கற்களை அமைத்து இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டுவந்து அவற்றை இடித்து தள்ளினர். எல்லை கற்களையும் அப்புறப்படுத்தினர்.  

இதுகுறித்து வருவாய் துறை உயர் அதிகாரி கூறுகையில், ‘‘ஏரியை ஆக்கிரமித்து 800க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதுகுறித்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் கொடுத்து உள்ளோம். அவர்களாகவே, முன்வந்து காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் விரைவில் ஈடுபடுவோம். மேலும், நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.


Tags : Temple Banana Lake , Disposal , Temple Banana, Lake
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...