×

காதுவலிக்கு தவறான சிகிச்சை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை; காதுவலிக்கு தவறான சிகிச்சை அளித்தது தொடர்பாக பதிலளிக்க மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்த புஷ்பவள்ளி என்பவர் தனது காது வலிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். காது வலிக்காக சென்ற புஷ்பவள்ளிக்கு இரண்டு செவிகளிலும் அறுவை சிகிச்சை செய்ததால் கேட்கும் திறன் முற்றிலும் பறிபோனதாக மனிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.


Tags : Government Hospital Chief Issues E-Court Branch ,CM ,High Court ,Madurai Rajaji Government Hospital Branch , Deafness, Misdiagnosis, Rajaji Government Hospital, Chief Minister, HighCourt Branch
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...