புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு ஒருவேளை மட்டும் வீட்டு உணவு வழங்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. ப.சிதம்பரத்துக்கு வீட்டு உணவு வழங்குதவில் எந்த பிரச்சனையும் இல்லை என சிபிஐ தரப்பு தெரிவித்ததை அடுத்து நீதிபதி அனுமதியளித்துள்ளார். முன்னதாக சிதம்பரம் உடல்நிலையை கருத்தில் கொண்டு வீட்டு உணவு வழங்க அனுமதி தருமாறு கபில் சிபில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.