×

தீபாவளிக்குள் அனைத்து தியேட்டர்களிலும் சிசிடிவி: உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

சென்னை: ஆன்லைனில் சினிமா டிக்கெட் விற்பனையை கொண்டு வருவது தீபாவளிக்குள் நடைமுறைப்படுத்துவது இயலாது என தமிழக செய்தி  மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சுதந்திரப்போராட்ட வீரரும், தமிழறிஞருமான மா.பெ.சிவஞானத்தின் 24-வது  நினைவு தினைத்தையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது திருவுருப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறுத்த ம.பொ.சி யின் புகழ், தமிழ் உள்ளவரை நிலைத்து  இருக்கும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய்  பட்டேல் என்றால் தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் ம.பொ.சி சிவஞானம் என்றும் தெரிவித்தார்.

புதிய திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படுவது விரைவில் கட்டுப்படுத்தப்படும், அதற்கான கமிட்டியை அரசு அமைத்துள்ளது என்று  கூறியுள்ளார். தீபாவளிக்குள் அனைத்து திரையரங்கிலும் சிசிடிவி பொறுத்துவதற்கான பணி நடைபெற்று வருகிறது. திரையரங்களில் அதிக  விலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதை கட்டுப்படுத்தப்படும் என்றார்.


Tags : Kadambur Raju ,theaters ,CCTV , CCTV in all theaters within Diwali: Action to curb food prices: Interview with Minister Kadambur Raju
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...