×

சிதம்பரம் அருகே பெற்ற தாயே 3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பெற்ற தாயே 3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசியதில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. சத்தியவதி என்பவர் சேத்தியாதோப்பில் உள்ள வெள்ளை ராஜன் வாய்க்காலில் தனது 3 குழந்தைகளையும் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் மூழ்கி அக்‌ஷயா(6), ஷிவானி(2) என்ற குழந்தைகள் உயிழந்துள்ளன. மாயமான நந்தினி(2) என்கிற குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாய் சத்தியவதியிடம் சேத்தியாதோப்பு காவல்துறையினர் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : children ,Chidambaram ,Chidambaram The Mother ,deaths ,Canal , Chidambaram, mother, baby girl, drain, death
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...