சிதம்பரம்: சிதம்பரம் அருகே பெற்ற தாயே 3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசியதில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. சத்தியவதி என்பவர் சேத்தியாதோப்பில் உள்ள வெள்ளை ராஜன் வாய்க்காலில் தனது 3 குழந்தைகளையும் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் மூழ்கி அக்ஷயா(6), ஷிவானி(2) என்ற குழந்தைகள் உயிழந்துள்ளன. மாயமான நந்தினி(2) என்கிற குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாய் சத்தியவதியிடம் சேத்தியாதோப்பு காவல்துறையினர் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.