புதுடெல்லி: ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இன்பதுரையில் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் 203 தபால் வாக்குகளை எண்ணுமாறு உயர்நீதிமன்றம் இருநாட்களுக்கு முன் உளத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.