மணமேல்குடி: மணமேல்குடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நாயிடம் அகப்பட்ட புள்ளிமானை அப்பகுதி மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள செய்யானம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் சென்றுவிட்டது. அப்போது அங்கிருந்த நாய்கள் மானை விரட்டி பிடிக்க முற்பட்டதால் அந்தமான் அங்குமிங்கும் ஓடியது. இதனைக் கண்ட அக்கிராம மக்கள் நாய்களிடம் இருந்து அந்த மனை காப்பாற்றினர்.
இதுகுறித்து அக்கிராம மக்கள் வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த புள்ளி மானே மீட்டுச் சென்றனர். தற்போது மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் புற்களை மேய செல்லும் மான்கள் இதுபோன்று வழிதவறி வேறு பக்கம் சென்று விடுவதாகவும் தற்போது பிடிபட்டுள்ளது. பெண்மான் என்றும் இதற்கு உரிய சிகிச்சை அளித்து பின் மீண்டும் பாதுகாப்பான வனப்பகுதியில் விட உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறினர்.