நெல்லை: நெல்லையில் முதிய தம்பதிகளை தாக்கி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 நாட்களுக்கும் மேலாக நடந்த விசாரணைக்கு பின், சண்முகவேல், செந்தாமரை தம்பதியை தாக்கி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற நபர் தனிப்படை போலீஸிடம் சிக்கியுள்ளார். அந்த கொள்ளையனிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.