×

பிரமோற்சவ விழாவில் பெருமாள் அணிய ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு சென்றது

திருவில்லிபுத்தூர்:  திருப்பதி பிரமோற்சவ விழாவில் சீனிவாசப்பெருமாள் அணிவதற்காக, ஆண்டாள் சூடிய மாலை திருவில்லிபுத்தூரிலிருந்து திருப்பதிக்கு நேற்று மாலை சென்றது. ஆந்திர மாநிலம், திருப்பதியில் பிரசித்தி பெற்ற புரட்டாசி பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இந்த விழாவின் 5ம் நாள் கருட சேவையின்போது, ஆண்டாள் சூடிய மாலையை, சீனிவாசப்பெருமாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதையொட்டி விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து, அவர் சூடிய மாலை திருப்பதிக்கு செல்லும்  வைபவம் நேற்று மாலை விமரிசையாக நடந்தது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாலை, ஆண்டாளுக்கு  நேற்று மாலை அணிவிக்கப்பட்டது. பின் சிறப்பு பூஜைகள், தீப வழிபாடு நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் ஒரு கூடையில் ஆண்டாள் சூடிய மாலை, கிளி மற்றும் வஸ்திரம் ஆகியவற்றை வைத்து, மேளதாளம் முழங்க  மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் திருப்பதிக்கு மாலை உள்ளிட்டவைகள் எடுத்து செல்லப்பட்டன.

Tags : anniversary ,celebration ,wedding ,Andalus ,Tirupati ,Andal , Perumal, wear , festival, Andal went , Tirupati
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா