×

ரூ.2 ஆயிரம் கடனுக்காக பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

சேலம்: சேலம் அருகேயுள்ள வேம்படிதாளம் செல்லியம்பாளையம் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ டிரைவர். இவர் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி, பலாத்காரம் செய்யும் வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில் வாலிபர் ஒருவரை ஹோமோசெக்ஸ்சுக்கு அழைத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், வீடியோவில் இருப்பது எனது கணவர் இல்லை எனவும், இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி, தவறான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்ேடா டிரைவர் மோகன்ராஜின் மனைவி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாதிக்கப்பட்ட அந்த பெண் நேற்று கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ஹாலோ பிரிக்ஸ் செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்று வந்தேன். திடீரென அந்த வேலையும் கிடைக்கவில்லை. பணம் இல்லாமல் இருந்த நேரத்தில், ஆட்டோ டிரைவர் மோகன்ராஜிடம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கினேன். அந்த பணத்தை கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் மோகன்ராஜ் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தார். ஒரு நாள் என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அப்போது என்னிடம் இப்போது பணம் இல்லை என்றேன். ஆனால் பணம் தரவேண்டாம், வீட்டிற்கு வந்துவிட்டு போ’ என்றார். அதனை நம்பி வீட்டிற்கு வந்தேன். அப்போது அவர் எனது நெற்றியில் அடித்தார். பிறகு கொன்றுவிடுவதாக மிரட்டி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். அதனை வீடியோவாக பதிவு செய்து அதனை வைத்து மிரட்டினார். அழைக்கும் போது வரவில்லை என்றால் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டினார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அப்பெண்ணுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சேலம் சிறையில் இருக்கும் மோகன்ராஜை போலீசார் சிறையில் வைத்து இன்று இந்த வழக்கில் கைது செய்கின்றனர். ஓரிரு நாட்களில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு வேறு யாரையாவது இதுபோன்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : auto driver ,Rape , Rape, auto driver, Case
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...