சென்னை: பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல் நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேனர் விழுந்ததில் தடுமாறி விபத்தில் சிக்கி சுபஸ்ரீ உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. சுபஸ்ரீ இழப்பில் இருந்து தமிழர்கள் மீளும் முன் பேனர் வைக்க அனுமதி கோரி அரசு நீதிமன்றத்தை அணுகி உள்ளது. தமிழர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் பேனர்களை தவிர்க்குமாறு கமல் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பேனரை பிரதமர் தவிர்த்தால் அதுவே அவருக்கு பெரிய விளம்பரமாக அமையும் என்றும் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.