×

தறிகெட்டு ஓடி பெட்ரோல் பங்கில் மோதி நின்ற கார்: 2 சிறுவர்களிடம் விசாரணை

சென்னை : ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்க் உள்ளது. நேற்று மாலை ஒரு கார் வேகமாக வந்து பெட்ரோல் பங்கின்  அலுவலக சுவரில் மோதி நின்றது. இந்த பார்த்த ஊழியர்களும், பெட்ரோல் போட வந்தவர்களும் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அலுவலகத்தில் யாரும் இல்லாத காரணத்தால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. தகவலறிந்த காசிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வந்து அந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ராயபுரத்தை சேர்ந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.

Tags : boys ,children , Petrol punk, car, 2 boys
× RELATED மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்