×

சிஆர்பிஎப் வீரர் மரணம்: தந்தை வழியில் நான் நாட்டை காப்பேன்: மகள் உருக்கம்

மீனம்பாக்கம்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் செந்தில்குமார் (44). சிஆர்பிஎப் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், அந்தமானில் கடந்த ஞாயிறு மாலை சக அதிகாரிகளுடன் கடலுக்கு குளிக்க சென்றார். அப்போது ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக  உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அந்தமானில் இருந்து  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தது. சிஆர்பிஎப் அதிகாரிகள், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அவரது ஒரே மகள் தன்யா (14) கண்ணீர்மல்க தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். அவர் கூறுகையில், ‘‘நானும்  எனது தந்தை வழியில் நாட்டைக்காக்கும் பணியில் ஈடுபடுவேன்,’’ என்றார். அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் செந்தில்குமார் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அலங்கரிக்கப்பட்ட வேனில் சொந்த ஊரான வாணியம்பாடிக்கு உடலை கொண்டு சென்றனர்.


Tags : death ,player ,CRPF ,country ,
× RELATED ஐசிசியின் பிப்ரவரி மாதத்திற்கான...