ஆலந்தூர்: சுதந்திர போராட்ட வீரரும், சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவ படை வீரருமான தியாகி எஸ்.ராமைய்யா (99) நேற்று மாலை காலமானார். இவரது உடல் ஆலந்தூர் புதுப்பேட்டை தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தகவலறிந்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் மற்றும் நிர்வாகிகள், மதிமுக நிர்வாகிகள் மறைந்த ராமைய்யா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.