திருமலை: தெலங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ராஜ்பவனில் நேற்று முன்தினம் தொடங்கிய திருவிழாவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பெண்களுடன் முளைப்பாரி வைத்து கோலாட்டம் ஆடினார். நேற்று ஊழியர்களுடன் கொண்டாடினார்.