×

8 கொலை வழக்கில் தேடப்பட்ட சென்னை ரவுடி கோவையில் கைது

கோவை: சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி கோவையில், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த போது கைது செய்யப்பட்டார்.
 சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகர், வள்ளுவர் நெடும்பாதை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(30). பிரபல ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 36 வழக்குகள் உள்ளன. என்கவுன்டர் லிஸ்டில் சேர்க்கப்பட்ட இவர் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்தார்.
இவரை சென்னை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் ேதடி வந்தனர். போலீசாரின் பிடியில் சிக்காமல் திருப்பூர் மற்றும் சேலத்தில் கடந்த சில நாட்களாக தங்கி இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ரவுடி ராதாகிருஷ்ணன், தனக்கு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வருவதாக சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உஷாரான சென்னை போலீசார் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் உத்தரவின்பேரில், சிங்காநல்லூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை செய்தனர். இந்நிலையில், நள்ளிரவு மருத்துவமனைக்கு செல்வதற்காக கோவை-திருச்சி சாலையில் நின்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணனை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை சிங்காநல்லூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தகவலின்பேரில் திருச்சி விரைந்த சென்னை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் அவரை அழைத்து சென்றனர்.

Tags : Chennai ,Rowdy Kovil , 8 arrested , Rowdy Kovil in Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...