×

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றாலத்தில் கடந்த 2தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது. பழைய குற்றாலத்தில் படிக்கட்டுகளில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடியது. ஐந்தருவியில் இரண்டு பிரிவுகள் ஒன்றாக இணைந்து வெள்ளம் கொட்டியது. புலி அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலைக்கு பிறகு மழை ஓய்ந்தது. நேற்று காலையிலும் மழை இல்லை. இரண்டு தினங்களுக்கு பிறகு நேற்று வெயில் தலைகாட்டியது. இதையடுத்து அருவிகளில் வெள்ளப் பெருக்கும் குறைந்தது. இதை தொடர்ந்து அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Courtalla , Allow bathing,Courtalla waterfalls
× RELATED தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில்...