×

ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்ட்கள் கோஷம்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, கடத்தூர், கோபி,  அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டுகளை  பெற்று சிலர் முறைகேடு செய்தனர். இதுதொடர்பாக மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ், கண்ணன்,  வீரமணி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில்,  கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை சிறையிலும், ரூபேஷ் திருச்சூர்  சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக ஈரோடு  ஒருங்கிணைந்த கோர்ட்டுக்கு 3 பேரும் நேற்று அழைத்து  வரப்பட்டனர். அவர்களை நீதிபதி  உமாமகேஸ்வரி முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3  பேரையும் வரும் 15ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.  இதைத்தொடர்ந்து 3 பேரும் சிறைக்கு அழைத்து  செல்லப்பட்டனர்.முன்னதாக, கோர்ட் வளாகம் வந்ததும்  கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வேண்டும் என கோஷமிட்டபடி  சென்றனர்.

Tags : Maoists ,Erode Court , Maoists chant , Erode Court
× RELATED வயநாடு தொகுதி மக்களை...