×

சாரணர் இயக்க ஆலோசகராக தமிழர் நியமனம்

சென்னை: பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவில் 4 ஆலோசகர்களை தலைமை அலுவலகம் நியமித்துள்ளது. அவர்களில் தமிழகத்தின் சார்பில் முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநரும் இடம் பெற்றுள்ளார். பாரத சாரண, சாரணியர் இயக்கத்திற்கு  தேசிய அளவில் ஆலோசகர்கள் நியமனம் என்பது புதுடெல்லியில் உள்ள தேசிய அளவிலான சாரண சாரணியர் தலைமை அலுவலகம் மூலம் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில், தற்போது தேசிய அளவிலான ஆலோசகர்கள் நியமித்து புதுடெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

அதில் தேசிய அளவிலான நிதி ஆலோசகராக குஜராத்தை சேர்ந்த ஜனார்த்தன்பாய், தேசிய ரயில்வே விவகார ஆலோசகராக தென் கிழக்கு ரயில்வேயின் ஜெயந்த்குமார் சாகா நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய அளவிலான சாரண சாரணியர் வளர்ச்சி ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநரும், தற்போதைய பாரத சாரண சாரணிய மாநில தலைமை  ஆணையராகவும் உள்ள இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய வழிகாட்டு ஆலோசகராக டெல்லியை சேர்ந்த மாணிக் பார்ஸ்லே நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Tamils ,Scout Operating Consultant , Scout Operating Consultant
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு