×

தென் ஆப்ரிக்காவுடன் முதல் டெஸ்ட் இந்திய அணியில் சாஹா சேர்ப்பு: ரிஷப் பன்ட் நீக்கம்

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்க அணியுடன் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், ரிஷப் பன்ட்டுக்கு பதிலாக விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பராக மீண்டும் இடம் பிடித்துள்ளார். இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட், விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ஆர். ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 11 வீரர்கள் அடங்கிய இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இளம் விக்கெட்  கீப்பர் ரிஷப் பன்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விருத்திமான் சாஹாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  2018 ஜனவரியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சாஹா, காயம் காரணமாக அதன் பிறகு  விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், சாஹா களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இளம் வீரர் ரிஷப் பன்ட் அவரது இடத்தை  பிடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது பன்ட்டுக்கு பதிலாக சாஹா சேர்க்கப்பட்டுள்ளார்.


Tags : Saha ,South Africa ,Test ,India Saha ,India , South Africa, First Test, Indian team, Saha, Rishabh Pant
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...