சாஹா சேர்க்கப்பட்டது குறித்து கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘சாஹா தற்போது முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராக உள்ளார். விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் அவர் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். காயம் காரணமாக அவர் வெளியேற நேரிட்டது துரதிர்ஷ்டவசமானது. என்னைப் பொறுத்தவரை உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் அவர் தான். அதனால் முதல் டெஸ்டில் அவர் விக்கெட் கீப்பராக செயல்படுவார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் பன்ட் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும், டெஸ்ட் போட்டிகளில் சாஹாவே எங்களின் முதல் தேர்வாக இருப்பார். அஷ்வின், ஜடேஜா இருவரும் சுழற்பந்துவீச்சுக்கு பொறுப்பேற்பார்கள்’ என்றார்.