×

துபாயில் 43 வருடமாக விடுமுறை எடுக்காத போலீஸ் அதிகாரி: கவுரப்படுத்திய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறை

துபாய்: துபாயில் 43 வருடமாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய காவல் அதிகாரியை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறை கவுரப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல் கைமா பகுதி போலிஸில் அதிகாரியாக அப்துல்ரஹ்மான் ஒபைத் அல் துனாஜி பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறை எடுக்காமல் 43 வருடங்களை பூர்த்தி செய்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  அப்துல்ரஹ்மான் ஒபைத் அல் துனாஜியை கவுரவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறை தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுயாமி விருது வழங்கி கவுரவித்தார். அப்போது விழாவில் பேசிய அவர்; விடுமுறை எடுக்காமல் 43 வருடமாக இந்த அதிகாரி பணியாற்றி இருப்பது அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது.

அவரது கடமையாலும் அர்ப்பணிப்பாலும் அவரது துறையின் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இவர் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருப்பார் எனவும் கூறினார். பின்னர் விழாவில் பேசிய அப்துல்ரஹ்மான் ஒபைத் அல் துனாஜி; நான் எனது கடமையைதான் செய்தேன். இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என கூறியுள்ளார்.


Tags : police officer ,Dubai ,United Arab Emirates Police RAK , RAK Police officer works for 43 years without taking leave
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...