×

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; இந்திய அணியில் அதிரடி மாற்றம்; ரிஷப் பண்ட் நீக்கம்; சாஹா, அஸ்வின் சேர்ப்பு

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்களை பிசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு விருத்திமான் சாஹா சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன.

முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் காயம் காரணமாக விலகியுள்ள பும்ராவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்;

விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், செத்தேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, அஸ்வின், ஜடேஜா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, முகமது ஷமி


Tags : Test ,South Africa ,Action change ,team ,Saha ,Removal ,Indian ,Aswin ,India , India vs South Africa: Rishabh Pant Dropped From Playing XI, Saha to Keep Wickets
× RELATED தேர்தல் பறக்கும்படை சோதனை; ராஜபாளையத்தில் ₹3.33 லட்சம் பறிமுதல்