நெல்லை: நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி பாளையங்கோட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,34,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனச் சோதனையில் ஈடுபட்ட வட்டாட்சியர் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும் முத்துக்குமார் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாளையங்கோட்டை தனிதாசில்தார் சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.