×

சார்-பதிவாளர் அலுவலகம் முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் வேல்முருகன்(50). விவசாயி. இவரது தாயார் அஞ்சலை பெயரில் பூர்வீக சொத்து உள்ளது. வேல்முருகன் தம்பி சுரேஷ். வேல்முருகனுக்கு பெரியநாயகி என்கிற முதல் மனைவியும், இரண்டாவது மனைவியாக ஐயம்மாள் உள்ளார் இவர்களுக்கு ஐஸ்வர்யா என்கிற மகள் உள்ளார். ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்று அவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். இந்நிலையில் ரங்கநாதன் தனது பேரன் பெயரில் நிலத்தை கிரயம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு இருந்த போது ஆத்திரமடைந்த வேல்முருகன் தனது பெயருக்கு தனது பங்கை அளிக்க வேண்டும் எனக்கூறி ஸ்ரீமுஷ்ணத்தில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் சரத்பாபு, ஸ்ரீமுஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் வேல்முருகனை தடுத்து நிறுத்தி மாற்று உடை அளித்து சமாதானப்படுத்தினர் மேலும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Tags : office ,registrar , Farmer
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...