சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற விதிமீறல் திருமணம் கண்டிக்கத்தக்கது என சிதம்பரத்தில் திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்தார். மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார். கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருள்களை, தமிழகத்தில் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கூறினார்.