டெல்லி: டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயனை வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி சந்தித்து பேசினார். கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் வயநாடு, மலப்புரம் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. கேரளாவில்
இதனையடுத்து, முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி, வெள்ளம் பாதித்த பகுதிகளை தொடர்ந்து 2-வது முறை நேரில் பார்வையிட்டார். வெள்ளத்தால் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ராகுல் காந்தி ஆய்வு செய்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கவலப்பாறை பகுதியை பார்வையிட்டார்.