நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை தாலுகா சிறப்பு வட்டாட்சியர் சாந்தினி மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உதகை தாலுகா அலுவகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.30,000 பணம் சிக்கியதையடுத்து சிறப்பு வட்டாட்சியர் சாந்தினி, இடைத்தரகர் பாலாஜி உள்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.