×

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி

பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாதுகாப்பு படயினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாப்பூர் மற்றும் கிர்னி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இன்று காலை 7.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் மோட்டார் குண்டுகள் மற்றும் சிறிய வகை துப்பாக்கிகளை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை யாரும் காயமடைந்ததற்கான தகவல்கள் வெளியாகவில்லை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது.  இதன்பின்பு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2003ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் அமைதி மற்றும் கட்டுப்பாடு நீடிக்க செய்ய இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த புரிந்துணர்தலை கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து இந்தியா அந்நாட்டுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து இதனை மீறி வருகிறது. இந்த வருடம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 2,000 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 21 இந்தியர்கள் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : troops ,Pakistani ,Poonch ,district ,Jammu ,Security forces ,Kashmir ,ceasefire ,LoC , Jammu and Kashmir, Poonch, Pakistan Army, ceasefire , Security Forces
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...