சென்னை: சிவாஜி கணேசனின் 92-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு சென்னையில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தினர். சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சிவாஜி சிலைக்கு மகன்கள் ராம்குமார், பிரபு , பேரன் விக்ரம் பிரபு உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.