×

நடுரோட்டில் 2 போலீசாரை புரட்டியெடுத்த ரவுடிகள்

புதுவை: புதுவை வில்லியனூர் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட கரிக்கலாம்பாக்கம் அடுத்த ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ரவுடி ஜோசப் மற்றும் ரோஸ் அய்யனார் ஆகியோர் குறித்து விசாரிக்க மைக்கேல், சிவகுரு ஆகிய 2 போலீசார் நேற்று இரவு சென்றனர். முதலில் ரவுடி ஜோசப்பை அவரது குடும் பத்துடன் சேர்த்து போலீசார் செல்போனில் படம் எடுத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த ஜோசப், அவரது தம்பி அருணாசலம் மற்றும் ரோஸ் அய்யனார் ஆகிய 3 ரவுடிகளும்  சேர்ந்து 2 போலீசாரிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினர். அவர்கள் தொடர்ந்து தாக்கியதால், போலீசார் உடனே தங்கள் செல்போன் மூலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இருந்தபோதும் அவர்களை நடுரோட்டில் போட்டு ரவுடிகள் புரட்டி எடுத்தனர்.

 பலத்த காயமடைந்த போலீசார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் ரவுடிகள் ஜோசப், ரோஸ் அய்யனார், அருணாச்சலம் ஆகியோர் மீது கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Tags : policemen ,road ,middle ,Midair Rounded Routes , 2 policemen , midair, Rounded Routes
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு